செய்திகள்

திருவெறும்பூர் அருகே கட்டிட தொழிலாளி கொடூரகொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்

Published On 2019-01-20 14:14 GMT   |   Update On 2019-01-20 14:14 GMT
திருவெறும்பூர் அருகே இன்று கட்டிட தொழிலாளியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையத்தை சேர்ந்தவர் ரதீஷ் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 1 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. 

இதையடுத்து அவரது உறவினர்கள் ரதீசை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை சந்து பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ரதீஷ் இறந்து கிடந்தார். 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

ரதீசின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதால் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் ரதீஷ் இறந்து கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு அவரது வீட்டின் அருகே சென்று நின்றதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

இதனால் கொலையில் உறவினர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரதீசுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News