செய்திகள்

ஓசூரில் ஆசிரியை வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

Published On 2018-12-19 05:42 GMT   |   Update On 2018-12-19 05:42 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர், டிச.19-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள திரிவேணி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. தனியார் பள்ளி ஆசிரியை. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அப்போது அவர்கள் கவிதாவை மிரட்டி ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம குறித்து கவிதா ஓசூர் டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News