செய்திகள்

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பல், கண் சிகிச்சை முகாம்

Published On 2018-12-15 09:38 GMT   |   Update On 2018-12-15 09:38 GMT
மெட்ரோ ரெயில் பயணிகள், பொதுமக்கள், ஊழியர்கள் அனைவரும் பயன் அடையும் வகையில் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பல், கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. #MetroTrain

சென்னை, டிச. 15-

மெட்ரோ ரெயில் பயணத்தை பொதுமக்களிடம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கால்டாக்சி, ஆட்டோ வசதியினை மெட்ரோ ரெயில் நிலை யங்களில் அறிமுகப்படுத் தியது.

இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பல் மற்றும் கண் சிகிச்சை முகாமினை வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்துகிறது.

பயணிகள், பொதுமக்கள், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் அனைவரும் பயன் அடையும் வகையில் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பல், கண் சிகிச்சை முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

17-ந்தேதி அண்ணா நகர் கிழக்கு நிலையம், 18-ந்தேதி அண்ணா நகர் டவர் நிலையம், 19-ந்தேதி சைதாப்பேட்டை நிலையம், 20-ந்தேதி கிண்டி, 21-ந்தேதி விமான நிலையம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இலவசமாக வழங்கப்படும் இந்த வாய்ப்பினை பயன் படுத்தி கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Tags:    

Similar News