செய்திகள்

பொன். ராதாகிருஷ்ணன் அவமதிப்பு - கேரள அரசு பஸ்சை சிறை பிடித்த பா.ஜ.க.வினர்

Published On 2018-11-23 05:33 GMT   |   Update On 2018-11-23 05:33 GMT
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலையில் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கேரள அரசு பஸ்சை சிறை பிடித்தனர். #Sabarimala #BJP

கூடலூர்:

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அவரை காரில் செல்ல விடாமல் அவமதிப்பு செய்தார். மேலும் ஊர் திரும்பும் போதும் மத்திய மந்திரியின் காரை மறித்து போலீசார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பா.ஜ.க.வினர் அதிருப்தியடைந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கேரள போலீசை கண்டித்து பா.ஜ.க.வினர் தேனி மாவட்டம் கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக கம்பத்துக்கு வந்த கேரள அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்ததால் பதட்டம் ஏற்பட்டது. மேலும் கேரள போலீசாருக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். சம்பவம் குறித்து அறிந்ததும் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷாஜகான், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் செய்தவர்களை கலைந்து போக எச்சரித்தனர்.

மேலும் இது தொடர்பாக கூடலூர் நகர பா.ஜனதா தலைவர் ஜெயக்குமார் நிர்வாகிகள் விஜயகுமார், பாண்டியன், ஜெயராம் முருகன், ரமேஷ்குமார், ராஜா, பெரியமருது ஆகியோரை கைது செய்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #Sabarimala #BJP

Tags:    

Similar News