செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் வாடகை கார் கிடைக்காமல் பயணிகள் அவதி

Published On 2018-11-12 08:21 GMT   |   Update On 2018-11-12 08:21 GMT
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் புக் செய்ததால் வாடகை கார் கிடைக்காமல் பயணிகள் அவதியுற்றனர். #ChennaiAirport
ஆலந்தூர்:

சென்னைக்கு டெல்லி, மும்பை, கோவா, அந்தமான் உள்ளிட்ட நகரங்களில் இருந்து காலையில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்தன.

அதில் வந்த பயணிகளில் சிலர் ‘ஓலா’ கால்டாக்சியை செயலி மூலம் புக் செய்தனர்.

விமானத்தை விட்டு இறங்கி வருவதற்குள் புக் செய்து வருகைப்பதிவு 2-வது நுழைவு வாசலில் உள்ள அதன் கவுண்டர் அருகில் காத்து நின்றனர்.

காருக்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ‘ஓலா’ கார் வராததால் 120 பயணிகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

அவர்கள் அந்த நிறுவன கவுண்டரில் சென்று கேட்டனர். ஒரே நேரத்தில் அதிக பேர் புக் செய்ததால் கார் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

விமானப் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செய்வதால் காருக்காக புக் செய்து நீண்ட நேரமாக கார் வராததால் குறித்த நேரத்திற்குள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

பின்னர் ஒவ்வொரு காராக வரத்தொடங்கியதும் அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். #ChennaiAirport
Tags:    

Similar News