செய்திகள்
சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி

பன்றி காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வினியோகம் - சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Published On 2018-11-11 03:29 GMT   |   Update On 2018-11-11 03:29 GMT
தமிழகத்தில் பன்றி காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார். #Swineflu
நெல்லை:

நெல்லையில் நேற்று பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் இதுவரை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் இறந்துள்ளனர். 268 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



பன்றி காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 5 லட்சம் மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

தற்போது 20 லட்சம் மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளை தவிர, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பன்றி காய்ச்சல் தடுப்பு மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவதை போல், பன்றி காய்ச்சலுக்கு இந்திய மருத்துவம் ஹோமியோபதி கழகம் அறிவுறுத்தலின் படி, கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

15 வகையான மூலிகை அடங்கிய இந்த குடிநீர் அரசு சித்த மருத்துவ ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Swineflu

Tags:    

Similar News