செய்திகள்

பாலியல் வன்கொடுமை முயற்சியில் பலத்த காயமடைந்த பிளஸ்டூ மாணவி உயிரிழப்பு

Published On 2018-11-10 08:26 GMT   |   Update On 2018-11-10 08:26 GMT
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது பலத்த காயமடைந்த பிளஸ்டூ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #DharmapuriGirlStudent #GirlMolested
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு, பிளஸ்டூ மாணவி ஒருவர் தனியாக சென்றுள்ளார். அப்போது அவரை சில நபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடிய மாணவியை கடுமையாக தாக்கி துன்புறுத்தி உள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.



பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தது, தருமபுரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
Tags:    

Similar News