செய்திகள்
கைகளில் கரும்புகளுடன் கருப்பு பேட்ஜ் அணிந்தப்படி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

தஞ்சை கரும்பு விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

Published On 2018-11-07 04:23 GMT   |   Update On 2018-11-07 04:23 GMT
நிலுவைத்தொகை வழங்க கோரி தஞ்சை கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015-16 -ம் ஆண்டுக்கான மாநில அரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ. 450 வீதம் 2 ஆண்டுகளுக்கு சுமார் 30 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.

இந்த நிலுவை தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர். மேலும் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதையடுத்து நிலுவைத்தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தீபாவளி பண்டிகை புறக்கணித்து கருப்பு தீபாவளியாக அனுசரிக்க முடிவு செய்தனர்.

அதன்படி கரும்பு விவசாயிகள் தஞ்சை குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் கரும்புடன் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை இன்னும் 15 நாட்களில் வழங்காவிட்டால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவோம் என்று விவசாயிகள்  தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவையாறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News