செய்திகள்

கோர்ட்டு தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது- அமைச்சர் கருப்பணன்

Published On 2018-10-26 10:37 IST   |   Update On 2018-10-26 10:37:00 IST
சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளதாக அமைச்சர் கருப்பணன் கூறினார். #ADMK #KCKaruppannan
அம்மாபேட்டை:

உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதை கொண்டாடும் வகையில் அம்மாபேட்டை ஒன்றியம் சித்தாரில் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமையில் இனிப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.சி.கருப்பணன் சித்தார் மற்றும் செம்படாபளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சில புல்லுருவிகள் அதிமுகவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார்கள் ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை.

சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. வரும் காலங்களில் ஜெயலலிதா ஆசியோடு அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KCKaruppannan
Tags:    

Similar News