செய்திகள்

திருமண ஆசை காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்- கல்லூரி மாணவர் கைது

Published On 2018-10-12 11:54 GMT   |   Update On 2018-10-12 11:54 GMT
ராஜபாளையம் அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகேயுள்ள ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பாஞ்சாலி (வயது 14). 8-ம் வகுப்பு படித்துள்ள இவர் டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அதே தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (20) என்ற கல்லூரி மாணவர் கடந்த 2 வருடமாக பாஞ்சாலியிடம் நெருங்கி பழகினார்.

அப்போது, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாஞ்சாலியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பாஞ்சாலியை திருமணம் செய்ய பாலமுருகன் மறுத்து விட்டார். மேலும் சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் பாஞ்சாலி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News