செய்திகள்

திருவண்ணாமலையில் போலி முத்திரை தயாரித்த 3 பேர் கைது- நீதிபதி ஆய்வில் சிக்கினர்

Published On 2018-10-11 17:10 GMT   |   Update On 2018-10-11 17:10 GMT
திருவண்ணாமலையில் போலி முத்திரை ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டுகளில் பல்வேறு வழக்கு கோப்புகளில் பயன்படுத்தப்படும் முத்திரை ரப்பர் ஸ்டாம்ப் போலியானது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு புகார் சென்றன.

இதையடுத்து சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் பெரியார் சிலை, கட்டபொம்மன் தெரு, மத்தலாங்குளத் தெருவில் உள்ள ஜெராக்ஸ், ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது 3 கடைகளில் அரசு அனுமதியின்றி நீதிபதி, அரசு அலுவலர்கள் சார்ந்த போலி முத்திரை ரப்பர் ஸ்டாம்ப்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்ப்களை நீதிபதிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அரிகிருஷ்ணன் (வயது 32), கதிரேசன் (49), டெல்லிபாபு (35) ஆகிய 3 பேரையும் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு, டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News