செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதி உண்ணாவிரத போராட்டத்தில் தினகரன் நாளை பேசுகிறார்

Published On 2018-10-07 10:04 GMT   |   Update On 2018-10-07 10:04 GMT
அரவக்குறிச்சி தொகுதி உண்ணாவிரத போராட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். #TTVDhinakaran

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் அரசின் மக்கள் விரோத நிலையை சுட்டிக்காட்டும் வகையில், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் 3-வது நாளான நாளை (திங்கட் கிழமை) மாலை 4 மணிக்கு வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் நடை பெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran

Tags:    

Similar News