செய்திகள்

பெண்ணை விபச்சாரத்திற்கு அழைத்த முதியவர் கைது

Published On 2018-09-30 15:41 GMT   |   Update On 2018-09-30 15:41 GMT
தர்மபுரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை விபச்சாரத்திற்கு அழைத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி:

தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள கோணம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஜோதி (வயது37). இவர் நேற்று வெளியூருக்கு செல்வதற்காக தருமபுரி நகர பஸ் நிலையத்திற்கு வந்தார். 

அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அருகில் உள்ள கூழ் கடை நடத்தி வரும் இண்டூரை சேர்ந்த ரவிக்குமார் (62) என்பவர் விபச்சாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஜோதி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News