செய்திகள்
நடிகர் கருணாசை கைது செய்தது சரிதான்- கிருஷ்ணசாமி
நடிகர் கருணாசை கைது செய்தது சரியானது தான் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #PuthiyaTamilagamKatchi #Krishnasamy #Karunas
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் புதிய தமிழகம் கட்சி திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் சரவணன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் அய்யர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுந்திரராஜன் வரவேற்றார்.
அதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் பதிலும் வருமாறு:-
கேள்வி:-தமிழக அமைச்சர்கள் சிலர் மேடை பேச்சில் சர்ச்சை ஏற்படுகிறதே?
பதில்:- அமைச்சர்களை குற்றம்சாட்ட முடியாது. ஒருவர் மட்டுமே பேசி வந்த கட்சி என்பதால் மேடையில் பேச்சு சில தடுமாற்றம் வருகிறது.
கேள்வி:- நடிகர் கருணாஸ் கைது பற்றி?
பதில்:- ஒரு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் அப்படி பேச கூடாது. முதல் அமைச்சரைப் பற்றியும் பேசுவது தமிழக அரசை பற்றி பேசுவதற்கு சமம், ஆனால் நாகரீகமாக பேச வேண்டும். கைது நடவடிக்கை சரியானது தான்.
கேள்வி:-தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு தகுதி திறன் தேவையா?
பதில்:-நீட் தேர்வை வரவேற்கிறேன். பொறியியல் படிப்பு, டாக்டர் படிப்பு உட்பட அனைத்து படிப்புகளுக்கும் தகுதி திறன் மாணவர்களுக்கு அவசியம், அப்படி தகுதி திறன் வளர்த்து கொள்ள வேண்டும். செவிலியர்களுக்கு தகுதி திறன் முக்கியமானது. இப்படிப்பட்ட கல்லூரி இல்லை, நீட் தேர்வுக்கான அடிப்படை கல்வி கொடுக்க வேண்டும்.
கேள்வி:-பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை?
பதில்:- மத்திய மாநில அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய பிரதமர் நேரில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Krishnasamy #Karunas
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் புதிய தமிழகம் கட்சி திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் சரவணன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் அய்யர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுந்திரராஜன் வரவேற்றார்.
அதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் பதிலும் வருமாறு:-
கேள்வி:-தமிழக அமைச்சர்கள் சிலர் மேடை பேச்சில் சர்ச்சை ஏற்படுகிறதே?
பதில்:- அமைச்சர்களை குற்றம்சாட்ட முடியாது. ஒருவர் மட்டுமே பேசி வந்த கட்சி என்பதால் மேடையில் பேச்சு சில தடுமாற்றம் வருகிறது.
கேள்வி:- நடிகர் கருணாஸ் கைது பற்றி?
பதில்:- ஒரு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் அப்படி பேச கூடாது. முதல் அமைச்சரைப் பற்றியும் பேசுவது தமிழக அரசை பற்றி பேசுவதற்கு சமம், ஆனால் நாகரீகமாக பேச வேண்டும். கைது நடவடிக்கை சரியானது தான்.
கேள்வி:-தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு தகுதி திறன் தேவையா?
பதில்:-நீட் தேர்வை வரவேற்கிறேன். பொறியியல் படிப்பு, டாக்டர் படிப்பு உட்பட அனைத்து படிப்புகளுக்கும் தகுதி திறன் மாணவர்களுக்கு அவசியம், அப்படி தகுதி திறன் வளர்த்து கொள்ள வேண்டும். செவிலியர்களுக்கு தகுதி திறன் முக்கியமானது. இப்படிப்பட்ட கல்லூரி இல்லை, நீட் தேர்வுக்கான அடிப்படை கல்வி கொடுக்க வேண்டும்.
கேள்வி:-பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை?
பதில்:- மத்திய மாநில அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய பிரதமர் நேரில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Krishnasamy #Karunas