செய்திகள்

முக அழகிரி நாளை அமைதி பேரணி- சென்னையில் ஆதரவாளர்கள் திரண்டனர்

Published On 2018-09-04 08:01 GMT   |   Update On 2018-09-04 08:01 GMT
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் இருந்து மு.க.அழகிரி தலைமையில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் அழகிரி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். #MKAzhagiri
சென்னை:

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதியின் உயிரோடு இருக்கும் வரையில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னர் தி.மு.க.வில் சேருவதற்கு அழகிரி மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து மதுரையில் தனது வீட்டில் வைத்து ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தினார்.

செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாகவும், இதில் 1 லட்சம்பேர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்துள்ள மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களையும் திரட்டி வருகிறார்.

சென்னை அண்ணா சாலை அருகில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி ஊர்வலமாக செல்வதற்கு மு.க.அழகிரி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்காக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் முறைப்படி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்து போலீசார் அழகிரியின் பேரணிக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் இருந்து அழகிரி தலைமையில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் அழகிரி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். நாளை நடைபெறும் இந்த பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. பேரணிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மு.க.அழகிரி, நேற்று காலையிலேயே மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். நாளை காலையில் பேரணியில் பங்கேற்கும் அழகிரி தனது அடுத்தக்கட்ட முடிவு என்ன? என்பதை அறிவிக்க உள்ளார். #MKAzhagiri
Tags:    

Similar News