செய்திகள்
திருமண நிச்சயத்தன்று சிறுமியை சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கோவையில் 4 வயது சிறுமியை சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வடவள்ளி:
கோவை வீரகேரளம் தென்றல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் பீளமேடு பகுதியில் போஸ்டர் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
மணிகண்டன் அப் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச் சிறுமி தனது தாயிடம் கூறினார். அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் சில் மிஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மணிகண்டனுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதால் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.