செய்திகள்

திருச்சி முக்கொம்பில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட தொழிலாளர்கள்

Published On 2018-08-29 15:28 IST   |   Update On 2018-08-29 15:28:00 IST
உடைந்த முக்கொம்பு அணை மதகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 2 பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். #kollidam #kollidambridge #mukkombudam
திருச்சி:

திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் அதிகம் செல்வதால் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அங்கு தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று காலை கட்டுமான பொருட்கள் படகில் ஏற்றி செல்லப்பட்டு, பணிகள் நடந்து வரும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆற்றின் நடுவே செல்லும் போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதில் இருந்த 2பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  #kollidam #kollidambridge #mukkombudam
Tags:    

Similar News