செய்திகள்
கர்ப்பிணி எனக் கூறி தவறான சிகிச்சை- அதிகாரிகள் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
கர்ப்பிணி எனக் கூறி தவறான சிகிச்சை அளித்தது தொடர்பான புகார் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission
சென்னை:
மதுரை விரகனூர் அருகே உள்ள கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி யாஸ்மின். இவர் கருவுற்றிருப்பதாக கூறி 8 மாதங்களாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அதன்பின்னர் குழந்தை இல்லை என்று கூறியதாகவும் அவரது கணவர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இணை இயக்குனர்கள் பதில் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission
மதுரை விரகனூர் அருகே உள்ள கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி யாஸ்மின். இவர் கருவுற்றிருப்பதாக கூறி 8 மாதங்களாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அதன்பின்னர் குழந்தை இல்லை என்று கூறியதாகவும் அவரது கணவர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இணை இயக்குனர்கள் பதில் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission