செய்திகள்

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2018-08-15 14:46 GMT   |   Update On 2018-08-15 14:46 GMT
போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பள்ளிக்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 35). இவர் விழுப்புரம் ஆயுதப் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

அதே காவல் துறையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த மேல்சித்தாமூரை சேர்ந்த ஓவியா என்பவருடன் குமரேசனுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஓவியா திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று குமரேசன் செல்போனில் தனது மனைவி ஓவியாவுடன் பேசினார்.

அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குமரேசன் மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மருத்துவமனைக்கு சென்றார். சிகிச்சை பெற்று வரும் குமரேசனை பார்த்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News