செய்திகள்

குடிபோதை தகராறில் விவசாயி அடித்து கொலை: தந்தை-மகன் கைது

Published On 2018-07-31 12:08 IST   |   Update On 2018-07-31 12:08:00 IST
உத்திரமேரூர் அருகே குடிபோதை தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

உத்திரமேரூரை அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (50). விவசாயி.

நேற்று இரவு அவர் அதே பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் குடிபோதையில் வந்தார்.

அவரிடம், முருகானந்தம் மது குடித்து வந்தது தொடர்பாக அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள்.

பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்தது பற்றி கூறினார். இதைத் தொடர்ந்து இருவரும் முருகானந்தம் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவரை வெளியே அழைத்து சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த முருகானந்தத்தை உத்திரமேரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், வழக்குப் பதிவு செய்து நடராஜ், அவரது மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News