செய்திகள்

சீர்காழி அ.தி.மு.க. பிரமுகர் கொலை: சேலம் கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2018-07-27 15:35 IST   |   Update On 2018-07-27 15:35:00 IST
சீர்காழி அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் சேலம் கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Mrudercase #Bombthrowing

சீர்காழி:

நாகை மாவட்டம், சீர்காழி, எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47), இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், முதல் நிலை காண்ட்ரக்டராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் ரமேஷ்பாபு மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்த மர்ம நபர்கள் சிகப்பு நிற காரில் தப்பி சென்றதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும், உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டது.

கொலை நடந்த அன்று மாலை திருக்கடையூர் அருகே கருவேலக்காட்டில் கேட்பாரற்று சிகப்பு நிற கார் ஒன்று நிற்பதாக பொறையார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிகப்பு நிற காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரனை மேற்கொண்டனர். இதில் மேற்படி காரில் எழுதப்பட்டிருந்த நம்பர் போலியானது என்றும், அது ஒரு இருசக்கர வாகனத்தின் நம்பர் என தெரியவந்தது. இதன் அடிப்படையில் காரின் என்ஜீன் நம்பர், சேஸ் நம்பர் ஆகியவற்றை ஆய்வு செய்து உண்மையான உரிமையாளரை தேடி போலீசார் சேலம் சென்றனர். விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கார் உரிமையாளர் என தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் வரதராஜனை சீர்காழி அழைத்து வந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சேலம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு பார்த்திபன், அருண்பிரபு, பிரேம்குமார் ஆகிய 3 பேர் சரணடைந்தனர். இருப்பினும் சரணடைந்த 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது உண்மை தெரியவரும்.

இந்நிலையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி கொலை தொடர்பாக நேரடி பார்வையில் விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் உண்மை குற்றவாளி பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். #Mrudercase #Bombthrowing

Tags:    

Similar News