செய்திகள்

தண்ணீர் திறப்பு - கால்வாய் பக்கம் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் - கலெக்டர் அறிவுரை

Published On 2018-07-23 17:16 IST   |   Update On 2018-07-23 17:16:00 IST
தண்ணீர் திறப்பு எதிரொலியால் கால்வாய் பக்கம் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார். #collector

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காவேரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் வெள்ள நீர் வருகிறது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதும் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் காவேரி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கு வேண்டும். அவர்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். காவேரி ஆற்றில் இறங்கவோ, ஆற்றினை கடக்கவோ முயற்ச்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய்களிலும் மேட்டூர் வாய்க்காலிலும் அதன் முழுக் கொள்ளளவிற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை கால்வாய்களின் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கு வேண்டும். கால் வாயில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் செல்லும் போது பொதுமக்கள் கவனமுடனும் மிகுந்த எச்சரிக்கையாகயுடனும் இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News