செய்திகள்

மோடியை எதிர்க்க பலமான கூட்டணி அமைக்க உள்ளோம்: வசந்தகுமார் எம்எல்ஏ பேட்டி

Published On 2018-07-23 10:09 GMT   |   Update On 2018-07-23 10:09 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்க பலமான கூட்டணி அமைக்க உள்ளோம் என வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #pmmodi #vasanthakumarmla

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்த குமார் எம்.எல்.ஏ. ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் இதுவரை புதியதாக யாரும் நியமனம் செய்யவில்லை. விரைவில் அறிவிப்பு வரும்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, மோடியை கட்டி தழுவியது அன்பின் வெளிப்பாடு. மோடியை எதிர்க்க வேண்டும், நாட்டு மக்களையும், வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க உள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் உறவு நிலையானது.

தூத்துக்குடி விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருந்தால் 13 உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு அவர் கூறினார். #pmmodi #vasanthakumarmla 

Tags:    

Similar News