செய்திகள்

டெல்லியில் 24-ந்தேதி தர்ணா போராட்டம்: விக்கிரம ராஜா பேட்டி

Published On 2018-07-05 10:24 GMT   |   Update On 2018-07-05 10:24 GMT
வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் டெல்லியில் 24-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தயிருக்கிறோம் என்று விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja

திசையன்விளை:

திசையன்விளை அனைத்து வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் கடைபிடிக்க முடியாத சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்ட விதிகளை நிர்ணயம்படுத்த வேண்டும், 28 சதவிகிதம், 18 சதவிகிதம் வரி விதிப்புகளை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்ன அரசு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற நேரத்தில் இன்று பிலிப்காட் நிறுவனத்தை வாங்கி வால்மார்ட் நிறுவனம் பொய்யான புள்ளி விபரங்களை தருகிறார்கள்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று அப்பட்டமான பொய் புகாரோடு வால்மார்ட் நிறுவனம் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது. இது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். பிலிப்காட் நிறுவனம் வாங்கிய 87 சதவிதம் பங்குகளை உடனடியாக திருப்பி பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் வரும் 24-ந் தேதி ஆயிரக்கணக்காண வணிகர்களை தமிழகத்தில் இருந்து அழைத்து சென்று பேரணி மற்றும் தர்ணா நடத்தயிருக்கிறோம்.

இவ்வாறு விக்கிரம ராஜா கூறினார். #vikramaraja

Tags:    

Similar News