செய்திகள்

பேஸ்புக்கில் இந்திய வரைபடத்தில் தமிழகத்தை கருப்பு மையிட்ட மருத்துவர் மீது வழக்கு

Published On 2018-06-13 16:43 IST   |   Update On 2018-06-13 16:49:00 IST
இந்திய வரைப்படத்தில் தமிழக பகுதியை கருப்பு மையிட்டு அழித்ததப்படி பேஸ்புக் பதிவு செய்த தஞ்சைவூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கும்பகோணம்:

தமிழர் பாதுகாப்பு மற்றும் தமிழர் தாயக மீட்பு என்ற அமைப்பு சார்பில் கும்பகோணத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாடு நடைபெறுவதையொட்டி பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. அதில் ‘‘ இந்து..இந்தி.. இந்தியா எதிர்ப்பவர்களுக்கும்... தமிழ், தமிழர், தமிழ்நாடு ஏற்பவர்களுக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் இந்திய வரைப்படத்தில் தமிழக பகுதியை கருப்பு மையிட்டு அழிக்கப்பட்டு இருந்தது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேஸ்புக் பதிவு செய்து கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

இதில் கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர் சிளம்பரசன் (வயது 32) என்பவர், பேஸ்புக்கில் வெளியிட்டது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News