செய்திகள்

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 1330 அடி விழிப்புணர்வு ஓவியம் - அமைச்சர் கந்தசாமி பரிசு வழங்கினார்

Published On 2018-06-01 10:00 GMT   |   Update On 2018-06-01 10:00 GMT
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 1330 அடி நீள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரையும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:

புதுவை அரசின் வனம் மற்றும் வனவிலங்கு துறையும், புதுவை சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தேங்காய்திட்டு அரசு கழிமுக மீன் பண்ணையில் 1330 அடி நீள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரையும் போட்டி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாரியப்பன், ஜி.ஆர். சண்முகம், டாக்டர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வினோத்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக புதுவை வனத்துறை தலைமை வன காப்பாளர் குமார், புதுவை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மோகன்குமார், மீன்வளத்துறை துணை இயக்குனர் மீரா சாகிப் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவிய போட்டியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

செம்படுகை நன்னீரகம் ராமமூர்த்தி, ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றிச்செல்வம், பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, எம்.ஜி.ஆர். பொதுநல பேரவை சிவா, கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் ராஜா, தமிழ்கனல் ராமகிருஷ்ணன், தமிழ்பணி மன்றம் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News