செய்திகள்

கதிராமங்கலம் போராட்டம் - டைரக்டர் கவுதமனுக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2018-05-31 03:19 GMT   |   Update On 2018-05-31 03:19 GMT
டைரக்டர் கவுதமனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மதுரை:

சினிமா இயக்குனர் கவுதமன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மே 19-ந் தேதி ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன் அனுமதியின்றி கலந்து கொண்டதாக பந்தநல்லூர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நான் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கு தொடர்பாக பந்தநல்லூர் போலீசார் என்னை கைது செய்ய தேடி வருகின்றனர். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு நான் உட்பட்டு நடந்து கொள்வேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதமனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 
Tags:    

Similar News