செய்திகள்

மே 30-ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு

Published On 2018-05-28 15:26 GMT   |   Update On 2018-05-28 15:26 GMT
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த பிளஸ் 1 தேர்வுகளின் முடிவுகள் வரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. #TNResults
சென்னை:

தமிழக மாநில பாடத்திட்டம் மற்றும் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் கீழ் படித்த பிளஸ் 1 மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.  விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஜூன் 2, 4இல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கீழ்கண்ட இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.tnresults.nic.in
http://www.dge1.tn.nic.in
http://www.dge2.tn.nic.in
Tags:    

Similar News