செய்திகள்
நீட் தேர்வு கடினமாக இருந்ததாக மகள் கூறியதால் விவசாயி தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த விவசாயி நீட் தேர்வு கடினமாக இருந்ததாக மகள் கூறியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி, மே.7-
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவரது மகள் சுவாதி. இவர் புதுவையில் நேற்று நீட் தேர்வு எழுதினார். அவருடன் சீனிவாசனும் சென்றிருந்தார்.
தேர்வு முடிந்து வெளியே வந்த சுவாதி, தனது தந்தையிடம் தேர்வில் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறினார். இதனால் சீனிவாசன் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இன்று காலை சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வினால் ஏற்கனவே 2 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 3-வதாக சீனிவாசன் பலியாகி உள்ளார்.