செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி காஞ்சீபுரம்-திருவள்ளூரில் பா.ம.க.வினர் ரெயில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் பா.ம.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காஞ்சீபுரம் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பட்டு சேலை விற்பனைக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டன.
காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் திருமால்பூர்-சென்னை கடற்கரை ரெயிலை மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் பா.ம.க.வினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மேற்கு மாவட்டச் செயலாளர் உமாபதி, நிர்வாகிகள் சக்தி கமலாம்பாள், மகேஷ்குமார், செந்தில்குமார், செல்வராஜ், வரதராஜ், துரை, வாசு, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தினை முன் னிட்டு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகர் முழுவதும் அசம்பாவிதங் களை தடுக்க காவல் துறை யினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
மாமல்லபுரத்தில் கிழக்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, ஐந்து ரதம் சாலையில் கடைகள், சிற்பக்கூடங்கள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டு ராஜாஜி தெரு, மார்க்கெட் உள் ளிட்ட பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டு பஸ்நிலையத்தில் இருந்து மாவட்ட செயலாளர் வாசு, கணேச மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூரில் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி .சார்பில் ரயில் மறியல் போராட்டம் மாநில துணை பொது செயலாளர் பாலயோகி தலைமையில் நடைபெற்றது. மணவாளநகரிலிருந்து பேரணியாக வந்த பா.ம.க.வினர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் பா.ம.க.வினர் போலீசாரின் தடுப்பையும் மீறி ரயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரையும் போலீசார் கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் மாநில அமைப்பு துணை செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் இ.தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #tamilnews
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காஞ்சீபுரம் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பட்டு சேலை விற்பனைக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டன.
காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் திருமால்பூர்-சென்னை கடற்கரை ரெயிலை மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் பா.ம.க.வினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மேற்கு மாவட்டச் செயலாளர் உமாபதி, நிர்வாகிகள் சக்தி கமலாம்பாள், மகேஷ்குமார், செந்தில்குமார், செல்வராஜ், வரதராஜ், துரை, வாசு, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தினை முன் னிட்டு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகர் முழுவதும் அசம்பாவிதங் களை தடுக்க காவல் துறை யினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
மாமல்லபுரத்தில் கிழக்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, ஐந்து ரதம் சாலையில் கடைகள், சிற்பக்கூடங்கள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டு ராஜாஜி தெரு, மார்க்கெட் உள் ளிட்ட பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டு பஸ்நிலையத்தில் இருந்து மாவட்ட செயலாளர் வாசு, கணேச மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூரில் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி .சார்பில் ரயில் மறியல் போராட்டம் மாநில துணை பொது செயலாளர் பாலயோகி தலைமையில் நடைபெற்றது. மணவாளநகரிலிருந்து பேரணியாக வந்த பா.ம.க.வினர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் பா.ம.க.வினர் போலீசாரின் தடுப்பையும் மீறி ரயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரையும் போலீசார் கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் மாநில அமைப்பு துணை செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் இ.தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #tamilnews