செய்திகள்

வேளாங்கண்ணி, காஞ்சிபுரத்தில் சாலை விபத்துகள் - 6 பேர் உயிரிழப்பு

Published On 2018-03-17 09:45 IST   |   Update On 2018-03-17 09:45:00 IST
நாகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த இரு வேறு விபத்துக்களில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
நாகை:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ஈ.சி.ஆர் சாலையில் இன்று காலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. தெற்கு பொய்கைநல்லூர் அருகே சென்றபோது, அந்த கார் மீது மினி லாரி ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர்.

அவர்கள் கேரளாவை சேர்ந்த திலீப், ஆரிசாமி, கிருஷ்ணவேணி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இந்த விபத்தில் காயமடைந்த 2 பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் படாளத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அகிலா என்ற பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

சென்னை கோயம்பேட்டில் வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #tamilnews

Similar News