செய்திகள்

கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய கோரி பிணம்போல் சாலையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-11-28 15:28 IST   |   Update On 2017-11-28 15:28:00 IST
பல்லாவரத்தில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய கோரி பிணம்போல் சாலையில் படுத்து பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

தாம்பரம்:

பல்லாவரம் நகராட்சிக் குட்பட்ட அஸ்தினாபுரம், நேதாஜிநகர் பிரதான சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. மேலும் கழிவுநீர், குடிதண்ணீரிலும் கலந்து வந்தது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கழிவு நீர் அடைப்பை சரி செய்யக் கோரி பல்லாவரம் நகர குடியிருப்போர் நல சங்கங் களின் இணைப்பு மையம் சார்பில் இன்று காலை அஸ்தினாபுரம் சாலையில் நூதன போராட்டம் நடை பெற்றது.

சாலையில் பிணம்போல் 2 பேர் படுத்து கிடந்தனர். அவர்கள் மீது பூ மாலையும் போடப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிட்லபாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்ற னர்.

Similar News