செய்திகள்

பவானியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி

Published On 2017-10-10 11:24 GMT   |   Update On 2017-10-10 11:24 GMT
பவானியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானி:

பவானி தேவபுரம் 2-வது வீதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் கூலி தொழிலாளி. இவரது மகள் பார்வதி தேவி (வயது 13). இவர் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு பார்வதிதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை உடனடியாக அவரது பெற்றோர் பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

பிறகு மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மீண்டும் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு மாணவி பார்வதிதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

Similar News