செய்திகள்

கோபி அருகே காதல் திருமணம் செய்த பேராசிரியை தற்கொலை

Published On 2017-08-19 04:50 GMT   |   Update On 2017-08-19 04:50 GMT
கோபி அருகே காதல் திருமணம் செய்த பேராசிரியை கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.ஈ. படித்துள்ளார். இவரது மனைவி பெயர் மஞ்சுளா (26). இவரும் எம்.ஈ. படித்தவர். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்தார்.

இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 6.6.2016 அன்று திருமணம் நடந்தது. இந்த காதல் தம்பதியினருக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் பேராசிரியை மஞ்சுளா மனம் உடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மஞ்சுளா வீட்டினுள் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பேராசிரியை தற்கொலை குறித்து கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News