செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு பணி
கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளச்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து வெள்ளச்சேதத்தை தடுக்க, மழைநீர் சேமிக்க, தடுப்பணை கட்ட பூகோள ரீதியில் இடம் தேர்வு செய்ய பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழக சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் விமானவியல் துறையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஆய்வுப்பணியை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆளில்லா விமானத்துடன் கடலூர் வந்தனர்.
ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடக்க விழா கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக விழாவுக்கு வருவாய்த்துறை முதன்மை செயலாளர் சத்திய கோபால், வருவாய்த்துறை அரசு செயலாளர் சந்திர மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக் டர் ராஜேஷ் வரவேற்றார். இதில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா நன்றி கூறினார்.
இந்த ஆளில்லா விமானம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் எடுக்கப்படும் வரைப்படங்கள் மற்றும் அவை குறித்த அறிக்கைகள் கலெக்டர் மூலம் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பேரில் வெள்ளப் பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளச்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து வெள்ளச்சேதத்தை தடுக்க, மழைநீர் சேமிக்க, தடுப்பணை கட்ட பூகோள ரீதியில் இடம் தேர்வு செய்ய பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழக சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் விமானவியல் துறையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஆய்வுப்பணியை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆளில்லா விமானத்துடன் கடலூர் வந்தனர்.
ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடக்க விழா கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக விழாவுக்கு வருவாய்த்துறை முதன்மை செயலாளர் சத்திய கோபால், வருவாய்த்துறை அரசு செயலாளர் சந்திர மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக் டர் ராஜேஷ் வரவேற்றார். இதில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா நன்றி கூறினார்.
இந்த ஆளில்லா விமானம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் எடுக்கப்படும் வரைப்படங்கள் மற்றும் அவை குறித்த அறிக்கைகள் கலெக்டர் மூலம் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பேரில் வெள்ளப் பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.