செய்திகள்
சிவகிரி வனவர் கொலையில் கூலிப்படை கும்பல் 3 பேர் கைது
சிவகிரி வனவர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, வந்தனர்.
சிவகிரி:
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் திருமலைக்குமார் மகன் முருகேசன் (வயது 33). இவர் சிவகிரி வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் நேற்று மதியம் சிவகிரி வனத்துறை அலுவலகத்தின் வாசலில் முருகேசன் தனது அதிகாரிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் அரிவாள்களுடன் இறங்கினர். அவர்களை பார்த்ததும் முருகேசன் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார்.
ஆனால் அவரை அங்கிருந்து தப்ப விடாமல் தடுத்த மர்ம நபர்கள் 3 பேரும், முருகேசனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை, கழுத்து, கை மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுகள் விழுந்தன. இதில் சரிந்து விழுந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் 3 கும்பல் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் ஏறி வேகமாக தப்பிச் சென்று விட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முருகேசனின் மனைவி ஜமுனா பல் டாக்டராக இருந்துள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி தென்காசி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் முருகேசன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே அவரது மனைவி தற்கொலை செய்ததில் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? அதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, வந்தனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரகுராம்ராஜன், சிவலிங்கசேகர், மாரீஸ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி இக்கொலை சம்பவம் தொடர்பாக சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த அருண் (28), உள்ளார் கிராமத்தை சேர்ந்த தேவக்குமார் (29), லெட்சுமணன் (23) ஆகிய 3 பேரை நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.
முருகேசன் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணயில் பரபரப்பு தகவல் வெளியானது.
ஜமுனா தற்கொலை செய்து கொண்டதும் அவரது தந்தை புகழேந்தி, முருகேசனிடம் மகளுக்கு வரதட்சணையாக கொடுத்த நகைகளை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தற்போது புகழேந்தி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
முன் விரோதம் காரணமாக புகழேந்தி கூலிப்படையை ஏவி மருமகன் முருகேசனை தீர்த்து கட்டியிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் முருகேசன் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் திருமலைக்குமார் மகன் முருகேசன் (வயது 33). இவர் சிவகிரி வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் நேற்று மதியம் சிவகிரி வனத்துறை அலுவலகத்தின் வாசலில் முருகேசன் தனது அதிகாரிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் அரிவாள்களுடன் இறங்கினர். அவர்களை பார்த்ததும் முருகேசன் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார்.
ஆனால் அவரை அங்கிருந்து தப்ப விடாமல் தடுத்த மர்ம நபர்கள் 3 பேரும், முருகேசனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை, கழுத்து, கை மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுகள் விழுந்தன. இதில் சரிந்து விழுந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் 3 கும்பல் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் ஏறி வேகமாக தப்பிச் சென்று விட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முருகேசனின் மனைவி ஜமுனா பல் டாக்டராக இருந்துள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி தென்காசி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் முருகேசன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே அவரது மனைவி தற்கொலை செய்ததில் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? அதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, வந்தனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரகுராம்ராஜன், சிவலிங்கசேகர், மாரீஸ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி இக்கொலை சம்பவம் தொடர்பாக சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த அருண் (28), உள்ளார் கிராமத்தை சேர்ந்த தேவக்குமார் (29), லெட்சுமணன் (23) ஆகிய 3 பேரை நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.
முருகேசன் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணயில் பரபரப்பு தகவல் வெளியானது.
ஜமுனா தற்கொலை செய்து கொண்டதும் அவரது தந்தை புகழேந்தி, முருகேசனிடம் மகளுக்கு வரதட்சணையாக கொடுத்த நகைகளை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தற்போது புகழேந்தி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
முன் விரோதம் காரணமாக புகழேந்தி கூலிப்படையை ஏவி மருமகன் முருகேசனை தீர்த்து கட்டியிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் முருகேசன் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.