செய்திகள்

காரைக்குடி அருகே மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

Published On 2017-05-26 15:33 IST   |   Update On 2017-05-26 15:33:00 IST
காரைக்குடி அருகே ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி:

காரைக்குடி செட்டிநாடு அருகே உள்ள நங்கப்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகன் அண்ணாமலை (வயது20), கட்டிட தொழிலாளி.

கடந்த ஆண்டு நங்கப்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலையின் 15 வயதுடைய மாமா மகள் வந்திருந்தார். அவரிடம் அண்ணாமலை “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று ஆசைவார்த்தை கூறினார். இதனால் அண்ணாமலையுடன் அவரது மாமா மகள் நெருக்கமாக இருந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.

இதுபற்றி அறிந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்து அண்ணாமலையிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர் அந்த பெண்ணையும், அவரது தாயையும் ஆபாசமாக பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய அண்ணாமலையை கைது செய்தார்.

Similar News