செய்திகள்
காரைக்குடி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி
காரைக்குடி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
காரைக்குடி:
காரைக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி, சத்யா, முத்துமாணிக்கம், உண்ணாமலை, அன்னபூரணி(வயது 36), வள்ளியம்மை, கிருத்திகா, 2 வயது குழந்தை ரோகிணி, அகிலாண்டேஸ்வரி ஆகிய 9 பேர் நேற்று மாலை திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக ஒரு காரில் சென்றனர். காரை சுப்பிரமணி ஓட்டிச்சென்றார்.
காரைக்குடியை அடுத்த மானகிரி பை-பாஸ் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது புதுச்சேரி மறைமலைநகரைச் சேர்ந்த மனோகர்(54), இவருடைய மனைவி மகாலட்சுமி(40), உறவினர்கள் சகுந்தலா, சுகன்யா, சரண்யா, அருண்பிரசாத், பிரபாகரன், குட்ளாயி ஆகிய 8 பேர் மற்றொரு காரில் புதுச்சேரியில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த காரை அருண்பிரசாத் ஓட்டிவந்தார்.
அப்போது காரைக்குடியை சேர்ந்தவர்கள் சென்ற காரின் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே புதுச்சேரியில் இருந்து வந்த காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் காரைக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்த முத்துமாணிக்கம்(15), அன்னபூரணி, ரோகிணி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். புதுச்சேரியில் இருந்து வந்த காரில் இருந்த மனோகர், அவருடைய மனைவி மகாலட்சுமி ஆகியோரும் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்ற அனைவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி, சத்யா, முத்துமாணிக்கம், உண்ணாமலை, அன்னபூரணி(வயது 36), வள்ளியம்மை, கிருத்திகா, 2 வயது குழந்தை ரோகிணி, அகிலாண்டேஸ்வரி ஆகிய 9 பேர் நேற்று மாலை திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக ஒரு காரில் சென்றனர். காரை சுப்பிரமணி ஓட்டிச்சென்றார்.
காரைக்குடியை அடுத்த மானகிரி பை-பாஸ் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது புதுச்சேரி மறைமலைநகரைச் சேர்ந்த மனோகர்(54), இவருடைய மனைவி மகாலட்சுமி(40), உறவினர்கள் சகுந்தலா, சுகன்யா, சரண்யா, அருண்பிரசாத், பிரபாகரன், குட்ளாயி ஆகிய 8 பேர் மற்றொரு காரில் புதுச்சேரியில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த காரை அருண்பிரசாத் ஓட்டிவந்தார்.
அப்போது காரைக்குடியை சேர்ந்தவர்கள் சென்ற காரின் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே புதுச்சேரியில் இருந்து வந்த காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் காரைக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்த முத்துமாணிக்கம்(15), அன்னபூரணி, ரோகிணி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். புதுச்சேரியில் இருந்து வந்த காரில் இருந்த மனோகர், அவருடைய மனைவி மகாலட்சுமி ஆகியோரும் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்ற அனைவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.