செய்திகள்

ஈரோடு: ஓடும் பஸ்சில் இளம்ஜோடி மாறி மாறி முத்தம்

Published On 2017-03-20 12:08 GMT   |   Update On 2017-03-20 12:08 GMT
ஓடும் பஸ்சில் இளம்ஜோடி சிரித்து பேசி மாறி மாறி முத்தம் கொடுத்து மகிழ்ந்தபடி வந்தனர். இதனால் பயணிகள் முகம் சுழித்தனர்.

ஈரோடு:

ராசிபுரத்தில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்று விட்டு பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது.

அப்போது பஸ்சில் ஒரு இளம்ஜோடி ஏறியது. இந்த ஜோடி இடது பக்கம் உள்ள இருவர் உட்காரும் சீட்டில் அமர்ந்து கொண்டனர். பஸ் புறப்பட்டதில் இருந்து இருவரும் சிரித்து... சிரித்து பேசி ஒருவர் மீது ஒருவர் விழுந்து மகிழ்ந்தப்படி வந்தனர்.

பஸ்சில் கூட்டம் அதிகம் இல்லாததால் அவர்களுக்கு மேலும் குஷியை ஏற்படுத்தியது. ஜன்னல் ஓரத்தில் உடகார்ந்திருந்த பெண்ணின் தலை முடி காற்றில் பறந்தது. இதை அருகே இருந்த வாலிபர் கவனித்து முடியை கோதி விட்டு கொண்டே இருந்தார். பதிலுக்கு அந்த பெண் வாலிபர் கன்னத்தில் மொட்டுகள் போல இருந்த வியர்வை துளிகளை தனது சேலையால் துடைத்தார். திடீரென அந்த வாலிபர் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட... பதிலுக்கு அந்த இளம் பெண்ணும் முத்தமிடவும் அந்த பஸ் காதல் வாகனமாக மாறி விட்டது.

இதை நோட்டமிட்டபடி பார்த்த பயணிகள் சிலர் முகம் சுழித்தனர். ‘‘இவர்கள் புதுமண தம்பதியாகவே இருக்கட்டும் அதற்காக ஓடும் பஸ்சில் இப்படியா கொஞ்சி குலாவுவது...? இது அநாகரீகமாக இல்லையா...? என்று பயணிகள் முணு முணுத்தனர்.

பஸ் அவினாசி சென்றதும் 10 நிமிடம் அந்த பெண் வாலிபர் மடியில் படுக்க அடுத்த 10 நிமிடம் அந்த இளம்பெண் மடியில் வாலிபர் படுத்து கொள்ள இந்த காதல் லீலைகளை ஒரு சில பயணிகள் ரசித்தப்படியே வந்தனர்.

Similar News