செய்திகள்
புதுக்கோட்டை அருகே செல்போன் டவரில் ஏறி காந்தியவாதி போராட்டம்
கொடும்பாளூரில் உள்ள சத்திரக்குளத்தை சீரமைத்து தூர்வார வேண்டும், அங்கு போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதி செல்வராஜ் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரை சேர்ந்த காந்தியவாதி செல்வராஜ்(வயது70). இவர் பொது பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் சைக்கிள் பயணம், நடைபயணம்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கொடும்பாளூரில் உள்ள சத்திரக்குளத்தை சீரமைத்து தூர்வார வேண்டும், அங்கு போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை அங்குள்ள செல்போன் டவரில் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை தாசில்தார் சதீஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன் ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் டவரில் இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர் களும் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள், போலீசார், அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு செல்வராஜ் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரை சேர்ந்த காந்தியவாதி செல்வராஜ்(வயது70). இவர் பொது பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் சைக்கிள் பயணம், நடைபயணம்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கொடும்பாளூரில் உள்ள சத்திரக்குளத்தை சீரமைத்து தூர்வார வேண்டும், அங்கு போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை அங்குள்ள செல்போன் டவரில் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை தாசில்தார் சதீஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன் ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் டவரில் இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர் களும் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள், போலீசார், அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு செல்வராஜ் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.