செய்திகள்
சிதம்பரம் கோவிலில் ரவிசங்கர் தரிசனம் செய்யவந்தபோது எடுத்தபடம்.

இளைஞர்கள் நடத்திய அறப்போராட்டம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி: ரவி சங்கர்

Published On 2017-01-27 10:30 IST   |   Update On 2017-01-27 10:30:00 IST
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்திய அறப்போராட்டம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்று வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்:

வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.

இளைஞர்கள் நடத்திய இந்த அறப்போராட்டம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். கடைசி நாள் போராட்டத்தில் சமூக விரோதிகளால் பிரச்சனை ஏற்பட்டது.

எனவே எதிர்காலத்தில் சமூக விரோதிகளை வெளியேற வைத்து நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் காக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் இணைந்து ஒத்துழைத்தது மிகவும் மகிழ்ச்சி.

தற்போது நாடு முன்னேற்றப்பாதையில் செல்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும், இளைஞருக்கும் வேலை கிடைக்க வேண்டும். இதற்காக அவர்கள் தங்களது திறமையை வளத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் நடத்திய போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Similar News