செய்திகள்
கடலூர்: கடலில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி
கடலூர் மாவட்டத்தில் கடலில் குளித்த இரு மாணவர்கள் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளியில் இன்று நடந்த குடியரசுத்தின விழாவில் பங்கேற்றுவிட்டு, கடலில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அலைகளில் சிக்கி நீந்த முடியாமல் கடலுக்குள் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு மாணவர்களின் உடல்களும் சில மணி நேரத்திற்குப் பின்னர் கரை ஒதுங்கியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மாணவர்களின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.