செய்திகள்

குடியரசு தினம்: மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

Published On 2017-01-25 12:35 IST   |   Update On 2017-01-25 12:35:00 IST
குடியரசு தினத்தினை முன்னிட்டு நாளை காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்று காஞ்சீபுரம் கலெக்டர் கூறியுள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குடியரசு தினத்தினை முன்னிட்டு நாளை (26-ந் தேதி) காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் உரிமம் பெற்று இயங்கும் கிளப்புகள் மற்றும் ஓட்டல்களில் இயங்கும் பார்கள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும்.

அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் சம்மந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News