செய்திகள்

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி

Published On 2017-01-03 14:53 IST   |   Update On 2017-01-03 14:53:00 IST
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்த ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சேகர் (54). ரெயில்வே துறையில் ஊழியராக பணிபுரிகிறார். இவர் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக செலக்கம்மா, திலகம், சதீஷ் உள்ளிட்ட 8 பேரிடம் ரூ.48 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தார்.

இதற்கு அயனாவரத்தைச் சேர்ந்த சுகுணா (27), திருவலாங்காடு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (50), திருமலை (58) ஆகியோர் செயல்பட்டனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சுகுணா மற்றும் சாமிநாதனை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சேகர் இன்று கைது செய்யப்பட்டார். தலை மறைவான திருமலையை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News