செய்திகள்
காஞ்சீபுரத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க விழிப்புணர்வு முகாம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில், ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
செல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் குறித்து இந்த முகாமினில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்த பயிற்சிகள் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து துறை அலுவலர்களும் தங்களுடைய களப்பணியாளர்களை இது போன்ற பயிற்சி முகாமினில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து பொதுமக்களிடையே ரொக்க மில்லா பரிவர்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் கலெக்டர் கஜலட்சுமி கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில், ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
செல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் குறித்து இந்த முகாமினில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்த பயிற்சிகள் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து துறை அலுவலர்களும் தங்களுடைய களப்பணியாளர்களை இது போன்ற பயிற்சி முகாமினில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து பொதுமக்களிடையே ரொக்க மில்லா பரிவர்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் கலெக்டர் கஜலட்சுமி கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.