செய்திகள்

ரூ.4 ½ லட்சம் செலவில் மாமல்லபுரம் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறை

Published On 2017-01-03 12:52 IST   |   Update On 2017-01-03 12:52:00 IST
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.4½ லட்சம் செலவில் புதுஎடையூர், புதுகல்பாக்கம் பகுதி கடலில் 5 கிலோ மீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அருகே புதுஎடையூர், புதுகல்பாக்கம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த நிலையில் வடபகுதி கோவளத்திலும், தென்பகுதி கல்பாக்கத்திலும் செயற்கை பவளப்பாறைகள் அதிகமாக உள்ளன.

அங்கு அதிகளவில் மீன்கள் கிடைத்தாலும் ஊர் கட்டுப்பாடு காரணமாக புதுஎடையூர், புதுகல்பாக்கம் கிராம மீனவர்கள் அங்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் சம்பவமும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.4½ லட்சம் செலவில் புதுஎடையூர், புதுகல்பாக்கம் பகுதி கடலில் 5 கிலோ மீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அணுமின் நிலைய இயக்குனர் ரவிசத்ய நாராயணா முன்னிலையில் கையெழுத்தானது. இதில் ஊர் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News