செய்திகள்

காஞ்சீபுரம் அருகே வீடுபுகுந்து கொள்ளையடித்த பெண் கைது

Published On 2017-01-01 12:44 IST   |   Update On 2017-01-01 12:44:00 IST
காஞ்சீபுரம் அருகே வீடுபுகுந்து கொள்ளையடித்த பெண்ணை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மனைவியுடன் வயலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவர்களது மகள் காயத்ரி மட்டும் இருந்தார்.

அவர் வீட்டின் மாடியில் துணியை காயப்போட்டு விட்டு கீழே வந்தார். அப்போது மர்மப்பெண் வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து கொண்டிருந்தார்.

சந்தேகம் அடைந்த காயத்ரி அவளிடம் விசாரித்த போது, உனது தாயின் தோழி என்று கூறி சமாளித்தார். மேலும் தண்ணீர் கொண்டுவரும்படி மர்மப்பெண் கூறினார்.

காயத்ரி தண்ணீர் கொண்டு வந்த போது அவர் தப்பி ஓட்டம் பிடித்தாள். அதிர்ச்சி அடைந்த காயதிரி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவள் காஞ்சீபுரத்தை சேர்ந்த சித்ரா(26) என்பதும் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

அவளை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News