செய்திகள்
தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு:
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஈரோடு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா பாசன பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் வேதனையில் தற்கொலை செய்து வருகிறார்கள். விவசாயிகளின் இந்த தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதேபோல் சம்பவம் நடக்காமல் இருக்க விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளின் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். விவசாயிகளின் துயர்களை போக்க மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
அப்படி அமைக்கவில்லையென்றால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஈரோடு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா பாசன பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் வேதனையில் தற்கொலை செய்து வருகிறார்கள். விவசாயிகளின் இந்த தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதேபோல் சம்பவம் நடக்காமல் இருக்க விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளின் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். விவசாயிகளின் துயர்களை போக்க மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
அப்படி அமைக்கவில்லையென்றால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.