செய்திகள்

சீர்காழியில் ஆஸ்திரேலிய ஆந்தை பிடிபட்டது

Published On 2016-11-04 16:52 IST   |   Update On 2016-11-04 16:53:00 IST
சீர்காழியில் ஆஸ்திரேலிய ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த ஆந்தை ஆஸ்திரேலிய நாட்டுபறவைகள் இனத்தை சேர்ந்த ஒரு அதிசய ஆந்தை என கூறப்படுகிறது.

சீர்காழி:

நாகப்பட்டினம் திருவேங்கடம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் புனித நம்பி மகன் பிரதீப்(23) அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(18) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சீர்காழி நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். அப்போது தலச்சங்காடு அருகில் சாலையோரத்தில் ஒரு அதிசய ஆந்தையை காகங்கள் கொத்திக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் காகங்களிடம் இருந்து அந்த ஆந்தையை மீட்டு சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த ஆந்தை ஆஸ்திரேலிய நாட்டுபறவைகள் இனத்தை சேர்ந்த ஒரு அதிசய ஆந்தை என கூறப்படுகிறது.

Similar News