செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகம் முற்றுகை: 300 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
நெய்வேலியில் இன்று என்.எல்.சி. இந்தியா தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நெய்வேலி ஆர்ச்கேட் அருகே தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் காலை 10 மணிக்கு தொ.மு.ச. பேரவை துணை தலைவர் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் ராசவன்னியன் தலைமையில் அங்கிருந்து 1-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி.தலைமை அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். காவிரி உரிமை மீட்பு தலைவர் பாண்டியன், என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வீர.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சேகர், தி.மு.க.இலக்கிய அணி செயலாளர் செயலாளர் தமிழரசன், தொ.மு.ச. ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிவேல், ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் இலக்கியா ரவி, எஸ்.எஸ்.இளஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தையொட்டி என்.எல்.சி. ஆர்ச்கேட் பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்களை பாதி வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தடையை மீறி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டுச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
நெய்வேலியில் இன்று என்.எல்.சி. இந்தியா தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நெய்வேலி ஆர்ச்கேட் அருகே தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் காலை 10 மணிக்கு தொ.மு.ச. பேரவை துணை தலைவர் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் ராசவன்னியன் தலைமையில் அங்கிருந்து 1-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி.தலைமை அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். காவிரி உரிமை மீட்பு தலைவர் பாண்டியன், என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வீர.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சேகர், தி.மு.க.இலக்கிய அணி செயலாளர் செயலாளர் தமிழரசன், தொ.மு.ச. ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிவேல், ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் இலக்கியா ரவி, எஸ்.எஸ்.இளஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தையொட்டி என்.எல்.சி. ஆர்ச்கேட் பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்களை பாதி வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தடையை மீறி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டுச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.